மே 1 , கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ?
நாம் என்ன செய்ய வேண்டும் ?
நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம்; கேள்விகளை கேட்போம்: உரிமைகளை பெறுவோம்...
கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் .
சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர் வாரீர் .....
1. கிராம ஜனநாயக திருவிழாவை மே-1 கிராமசபையில் கொண்டாட அனைவரும் வாருங்கள் .
2. நடைபெறாத பணிகளுக்கு கேட்க ஆளில்லை என்பதால் நடந்ததாய் கணக்கெழுதும் ஊராட்சி செயலாளரின் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள்.
3. மண் வெட்டியதாக மரம் நட்டதாக நம் பணத்தை சுரண்டி எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் மே-1.
4. கிராமசபை கூட்டத்தில் அரசு அலுவலர் கூட நம்மோடு தரையில்தான் உட்கார வேண்டும் . நம் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
5. மே 1 கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதை உறுதி செய்வோம் .
6. கிராமசபை கூட்டத்துக்கு சென்று வரவு செலவு விபரங்களை பரிசீலணை செய்வோம் .
7. ஓட்டுப் போடு வதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது-மே 1 .
8. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை அழிக்க துணை போகாதிருப்போம்..
9. பேருந்துவசதி குறித்து மே-1 கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுவோம் .
10. இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .
11. மே-1 நம் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள் .
12. மே-1 கிராமசபையில் பிளாஸ்டிக்(நெகிழி) பயன்படுத்த தடை கோருதல்_ சுற்றுபுறசுழல் மேம்பாடு -சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுவோம்.
13 . மே-1 கிராமசபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுவோம்.
14. மே-1 கிராமசபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றலாம் .
15. ஐனவரி-26 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை மே-1 கிராமசபையில் உங்களிடம் ஒப்புதல் பெற - கையெழுத்து வாங்க - வேண்டிய கட்டாயம் உள்ளது - நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?
16. மே-1 கிராமசபையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்துகொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.
17. நம் வரிப்பணத்தை நம் கிராமத்தில் கேட்க ஆளில்லை என்பதால் வீணடிப்பதை தவிர்க்க மே-1 கிராமசபைக்கு வாருங்கள் .
18.கிராமசபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை நம் கிராமத்திற்கு வரவைக்கலாம் .
19. 501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க உரிமை உண்டு.
20. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள் .
21. நமது கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் நம் கிராமத்திற்க்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.
22.கிராமசபையில் நல்லபொறுப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம் .
23. நம் கிராமத்தின் தேவைகளை - மட்டும் - தெரிந்தெடுக்க சரியான தருணம் மே-1 கிராமசபை .
24. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .
25. கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை பன்மடங்கு ஆக்க வாருங்கள் .
26. கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் மே-1 கிராமசபை கூட்டம் .
27. உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க !
28. வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம் .
29. ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வருவாய் துறை சார்ந்த வருமான, இருப்பிட, சாதி சான்றுகளை, பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்தில் வழங்க கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
30.இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.
31.ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது.
32.கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்த படுகிறதா ?
என்னென்ன பணிகள் நடைபெற்றது ?
தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?
என்ற கேள்விகளை எழுப்புங்கள் !
33.கிராமசபையில் அதிகாரம் மக்களுக்கே !
உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது.
இதனை ஆக்கபூர்வமாய் பயன்படுத்த - அனைவரும் தவறாமல் அணிதிரண்டு வருவோம்...
நம் கிராமத்தை வளமுள்ளதாக முன்னேற்றம் அடைய வழிவகுப்போம்
COMMENTS