இரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்
புதுக்கோட்டை ஆத்மா இரத்த வங்கி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து அடப்பங்காரச் சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரத்தசோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் தலைவர் சுவn.எஸ்.அழகப்பன் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் கே.ஆறுமுகம் மருத்துவர்.செல்வி.தி.தமிழ்மொழி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்இ மக்கள் தொடர்பு மாவட்ட இணைச் செயலாளர் கண.மோகன்ராஜ் பட்டய தலைவர் க.நைனா முகமது பொருளாhளர்.பி.அசோகன் ஜி.தனகோபால் ஆத்மா இரத்த வங்கியின் மேலாளர்.பழனி ஊர் முக்கிய பிரமுகர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சி கிராமத் திட்ட தலைவர் வி.ஆர்.எம்.தங்கராசு வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களுக்கு இரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் சோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் சுமார் இருநூறு பேர் முகாமில் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் க.ந.செல்வ ரத்தினம் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
COMMENTS