புதுக்கோட்டை மாவட்டம்
ஊராட்சிகளில் எங்கெங்கு அதிக பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறி;ந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து சீரமைப்பு பணிகளில் முழுமையாக ஈடுபடவேண்டும் - அன்னவாசல் மற்றும் விராலிமைல ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் உத்தரவு
அதன் விபரம் வருமாறு:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ள மாண்பமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட சில வார்டுகள் மற்றும் விராலிமலை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டு வருகின்றார்.
அந்த வகையில் அன்னவாசல் மற்றும் விராலிமலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி செயலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்; போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் இன்று(20.11.2018) சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3,470 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு ஜெனரேட்டர் மூலமாகவும், லாரிககள், டிராக்கடர்கள் மற்றம் டாடா ஏஸ் வாகனங்கள் மூலமாகவும் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளைச் சேர்ந்த 412 குக்கிராமங்களுக்கு 26 ஜெனரேட்டர்கள் மூலமாகவும், 2 லாரிகள் மூலமாகவும், 16 டிராக்டர் வாகனங்கள் மூலமாகவும், 20 டாடா ஏஸ் வாகனங்கள் மூலமகாவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், மின்கம்பங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டும் கூடுதலாக ஜே.சி.பி வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2,750 பணியாளர்கள் களத்தில் உள்ளனர். 35 லாரிகள், 25 டாடா ஏஸ் வாகனங்கள்;, 73 ஜெனரேட்டர்கள் குடிநீர் வழங்கப் பயன்படுத்தப்பட்டு 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 463 குக்கிராமங்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்கப்பட்டள்ளது. 45 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 3 ஊராட்சிகளைச் சேர்ந்த 23 குக்கிராமங்களுக்கு முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
ஊராட்சிகளில் எங்கெங்கு அதிக பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, எந்தெந்தப்பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகள் துவங்க வேண்டும், எங்கெங்கு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற தகவல்களை சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் செயலர்கள்தான் கண்காணித்து தகவல் தெரிவிக்க வேண்டும். எந்தப்பகுதியிலும் சீரமைப்பு பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று ஓரிரு நாட்களில் அன்னவாசல் மற்றும் விராலிமலைக்குட்பட்ட பகுதிகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டும், மின் கம்பங்கள் சீர்செய்யப்பட்டும், அனைத்துப்பகுதிகளுக்கும் முழுவதுமாக குடிநீர் வழங்கப்பட்;டும் இருக்க வேண்டும். அதற்கு ஊராட்சி செயலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்.
கரூர் மாவட்டத்தில் இருந்து போதிய ஜே.சி.பி வாகனங்களும், குடிநீர் பாட்டில்களும் வரவழைக்கப்பட்டு நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. எனவே, தங்கள் பகுதி மக்களுக்கு தற்போது என்ன அடிப்படை தேவை என்பதை அறிந்து அதை எனது கவனத்திற்கு ஊராட்சி செயலர்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் கிராமங்களில் தண்ணீர் தேவைப்பட்டாலோ, மின் இணைப்பு சரி செய்வதில் பின்னடைவு இருந்தாலோ உடனடியாக தகவல் தெரிவியுங்கள். அது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கோரிக்கை உடனுக்குடன் சரிசெய்யப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜெயபாரதி, வட்டாட்சியர்கள் திரு.சோனைகருப்பையா (இலுப்பு+ர்), லுhர்துசாமி (விராலிமலை), அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.ஆஷாராணி, உதவித்திட்ட அலுவலர்கள் திரு. அண்ணாத்துரை, திருமதி.சுருதி, மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் திரு.சுப்பிரமணியன், திரு.சங்களர், திரமதி.ஜான்சிராணி, திருமதி.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.நாகராஜன், திரு.சுவாமிநாதன், திரு.சங்கர், திரு.சிங்காரவேலு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்
COMMENTS