காமராஜர் வாழ்க்கை வரலாறு ; History of kamarajar ;
பிறப்பு:
குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு 1903 ஆம் ஆண்டு ஜீலை 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். ”காமாட்சி” எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பித்தில் இவருக்கு சூட்டப்பட்டது...அவரின் தாய் செல்லமாக “ராசா” என அழைப்பதுண்டு. பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே “காமராசர்” என்று வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பெயராக மாறியது.
‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர்.
எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !
‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர்.
1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம்.
இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, ‘‘என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே மந்திரிகளாய் பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா’’ என்று பதிலளித்தார்.
அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு !
காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள்.பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர்.
‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராஜர்.
திருவனந்தபுரம் சென்ற காமராஜர் :
ஆனால் காமராஜர் விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே அவரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்தில் அவரது இன்னொரு தாய்மாமா வைத்திருந்த காய்கறி கடையில் பணிபுரிந்தார் காமராஜர். அங்கேயும் அவரது விடுதலை போராட்ட ஈடுபாட்டை காமராஜர் குறைத்துக் கொள்ளவில்லை. கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்திற்கு காந்தியடிகள் வருகை தந்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். அந்த போராட்டத்தில் காமராஜரும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் துறவி :
விருதுநகரில் அவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருந்ததை அறிந்த காமராஜர் மீண்டும் திருவனந்தபுரத்திலிருந்து விருதுநகருக்கு வந்து சேர்ந்தார். குடும்பத்தினர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியும், காமராஜர் அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார். இந்திய நாடு விடுதலை பெறும் வரையில் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதனை அவர்களிடம் தெரிவித்து முழுநேரமாக தேச விடுதலை போராட்டத்திலேயே தன்னை இணைத்துக் கொண்டார். நாட்டிற்கு விடுதலை கிடைத்த பிறகும் கூட அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு :
சென்னை மவுண்ட் ரோடில் இருந்த வெள்ளைக்காரன் நீல் சிலையை அப்புறப்படுத்த ஒரு கிளர்ச்சி நடந்தது. காமராஜர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு பெரிய தொண்டர் படையைத் திரட்டிக் கொண்டு சென்னை வந்து காந்தியடிகளை சந்தித்தார். காங்கிரஸ் மாநாட்டில் அந்த சிலையை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .பின்னர் நீல் சிலை அகற்றப்பட்டது.1930ஆம் ஆண்டு நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் காமராஜர் பங்கு வகித்தார். இதனால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார் காமராஜர். பின்னர் காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். பிறகு மீண்டும் காமராஜர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலமைச்சர் காமராஜர் :
1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலில் காமராஜர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1954ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த மூதறிஞர் ராஜாஜி பதவியில் இருந்து விலகியதும் காமராஜர் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அடுத்த இரண்டு தேர்தல்களிலும் மக்களின் பேராதரவுடன் காமராஜரின் அமைச்சரவை தொடர்ந்து நீடித்தது.காமராஜரின் வளர்ச்சி திட்டங்கள் ;
முதல் அமைச்சராக இருந்தபோது காமராஜர் கல்வி தொழில் பொருளாதாரம் விவசாயம் ஆகிய துறைகளில் தமிழ்நாட்டை உச்சம் தொட வைத்தார். மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. படிக்காத மேதை என்று போற்றப்படும் காமராஜர் ஏழை எளியோர் என அனைத்து தரப்பு குழந்தைகளும் கல்விச் செல்வத்தை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கல்வியை வளர்க்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் காமராஜர். ஏராளமான புதிய பள்ளிகள் தமிழ்நாடு முழுவதிலும் திறக்கப்பட்டன.
மதிய உணவுத் திட்டம், மாணவர்களுக்கு சீருடை திட்டம், எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையில் இலவச கல்வி திட்டம் ஆகிய அற்புதமான கல்வி வளர்ச்சி திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்து ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களையும் பள்ளிக்கூடங்களை நோக்கி இழுத்தார் காமராஜர். இதனாலேயே இன்று வரையிலும் தமிழ்நாட்டில் கல்வி கண் திறந்த காமராஜர் என்ற புகழ் அவருக்கு நிலைத்து நிற்கிறது.
பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு மக்களிடம் நேரடியாகச் சென்று பழகி இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1963 ஆம் ஆண்டு காமராஜர் ஒரு புதிய திட்டத்தை பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் வழங்கினார். அந்தத் திட்டமே காமராஜர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி 1963ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காமராஜர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
1964ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி பிரதமராக இருந்த ஜவர்கலால் நேரு மறைந்தார். இதன் பிறகு அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காமராஜருக்கு இருந்தது. லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர். ரஷ்யா நாட்டுக்கு பயணம் சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி எதிர்பாராதவிதமாக 1966ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி காலமானார்.
காமராஜர் திட்டம் :
பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு மக்களிடம் நேரடியாகச் சென்று பழகி இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1963 ஆம் ஆண்டு காமராஜர் ஒரு புதிய திட்டத்தை பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் வழங்கினார். அந்தத் திட்டமே காமராஜர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி 1963ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி காமராஜர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டார்.
கிங் மேக்கர் :
1964ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி பிரதமராக இருந்த ஜவர்கலால் நேரு மறைந்தார். இதன் பிறகு அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காமராஜருக்கு இருந்தது. லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர். ரஷ்யா நாட்டுக்கு பயணம் சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி எதிர்பாராதவிதமாக 1966ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி காலமானார்.
மீண்டும் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு காமராஜரிடம் இருந்தது. பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் காமராஜரை பிரதமராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. இந்திரா காந்தி அம்மையாரை பிரதமர் ஆக்கினார். இதனாலேயே 'கிங் மேக்கர்' என்ற பெயரால் பெருந்தலைவர் காமராஜர் போற்றப்படுகிறார்.
தனக்கென்று எந்தவித சொத்தையும் சேர்க்காமல், தன் வீடு, குடும்பம் ஆகியவற்றைக் கூட பார்க்காமல் தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு பணி செய்வதிலேயே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அன்று மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார். இந்த செய்தியறிந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு வந்து காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
மறைவு ;
தனக்கென்று எந்தவித சொத்தையும் சேர்க்காமல், தன் வீடு, குடும்பம் ஆகியவற்றைக் கூட பார்க்காமல் தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு பணி செய்வதிலேயே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அன்று மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார். இந்த செய்தியறிந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு வந்து காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
எண்ணற்ற பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து மக்களின் வாழ்வை மேம்படுத்தி கல்விக் கண்ணைத் திறந்த படிக்காத மேதை காமராஜர் மறைந்தாலும் என்றென்றும் அவரது பெருமையும், புகழும் மக்கள் மனதில் இருந்து மறையாது என்று சொன்னால் அது மிகையல்ல! பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு நாமும் நமது வாழ்வில் சேவை மனப்பான்மையோடு வாழ வேண்டும் என்று உறுதி ஏற்போம்.
COMMENTS