சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கையெழுத்து இயக்கம்
ரோட்டரி மாவட்டம் 3000-ன்
வானவில் திட்டத்தினை புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை பேலஸ் சிட்டி சங்கம், புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம, மற்றும் சாலை விபத்து தடுப்பு மற்றும்
மீட்பு பொது நலச்சங்கம் இணைந்து
சாலைப்பாதுகாப்பு
விழிப்புணர்வு குறித்த கையெழுத்து
இயக்கம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில்
புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் கே.திருப்பதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துணைஆய்வாளர் தாமஸ்ராஜன், மருத்துவர் கே.எச்.சலீம், வானவில் திட்ட மாவட்ட செயலாளர்
ஜெ.ராஜேந்திரன்,
ஒருங்கிணைப்பாளர்
டாக்டர்.கே.பிரபாகரதாஸ், மக்கள்
தொடர்பு இணைச் செயலாளர் மாருதி.கண.மோகன்ராஜ்;, துணை ஆளுநர் ஆர்.ஆரோக்கியசாமி, கணக்காளர் சி.பிரசாத் கலந்து கொண்டு
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்து, பொதுமக்களுக்கு சாலைபாதுகாப்பு துண்டு
பிரசுரத்தை வழங்கினார்கள். முன்னதாக வருகைதந்த அனைவரையும் புதுக்கோட்டை
பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.எஸ்.காசிநாதன் வரவேற்றார். புதுக்கோட்டை
மகாராணி ரோட்டரி சங்கத்தலைவர் கவிதா ராஜசேகர், ரோட்டரி மாவட்டம் 3232 சென்னை மிராக்கில் சங்கத்தை சேர்ந்த
தலைவர் சிவபாலா ராஜேந்திரன், செயலாளர்
அருள்மொழிராமநாதன், புதுக்கோட்டை
ரோட்டரி சங்க செயலாளர் வி.ஜெயக்குமார், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் ஆர்.எம்.துரைமணி, மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர்
வே.கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக புதுக்கோட்டை மிட்டவுன்
ரோட்டரி சங்கத்தலைவர் செ.பழனியப்பன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கையெழுத்து இயக்கம்
மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் விழா
COMMENTS